9251 வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள் (நடைச் சித்திரம்). 

மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன்). கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

94 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ. , ISBN: 978-955-8637-28-9.

ஆசிரியரின் மறைவின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள அவரது நூல். இது முன்னர் தாயகம் சஞ்சிகையில் 2006 ஜுன் முதல் 2008 டிசம்பர் வரை தொடராக வெளிவந்திருந்தது. நூலுக்கான முன்னுரையையும் அவரே எழுதிச்சென்றுள்ளார். திறந்த பொருளாதாரம், பூகோளமயமாதல், என்பவற்றின் பாதிப்பிற்குள்ளாகாத யாழ்ப்பாணக்குடாநாட்டின் 1970-80 காலகட்டத்து மனிதர்களின் வாயிலாக சில சுவையான சம்பவங்களைப் பதிவுசெய்யும் நடைச்சித்திரங்கள் இவை. நுளம்பு நாகரத்தினம், சுருட்டு சங்கரப்பிள்ளை, கண்பரிகாரி கனகம்மா, மேசன் மகாலிங்கம், மாங்கண்டு மதியாபரணம், சகலகலா சுந்தரமூர்த்தி, பெரியவ பொன்னம்மா, பரந்தன் பாலசிங்கம், குழந்தை குமாரசுவாமி, தலைவர் தவராசா ஆகிய பத்து பாத்திரங்களின் வழியாக ஈழத்தமிழரின் சமூக வரலாற்றின் பல சுவைமிகு சம்பவங்களை நடைச்சித்திரங்களாகப் பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

14612 தமிழோடு இசை பாடல்.

லயனல் திலகநாயகம் போல். ஆனைக்கோட்டை: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண். வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xxiv, 81

Welcome to Gambling Gods

Articles Betsafe tips cricket | How would Players Develop Matches Or Events? Gambling On the Favourites Blindly Most other Tipsters Like this One to The