9564 இருளினைக் கிழித்து தெருவினில் இறங்கு.

லோ.சிநேகலதா (புனைபெயர்: சூர்யா). யாழ்ப்பாணம்: ஞானவைரவர் இந்து இளைஞர் மன்றம், கைதடி நுணாவில், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

(5), 25 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 20.5×13.5 சமீ.

மேதினம், புதுமைகள் செய்திடுவோம், எழுந்திடு இன்றே, அட சொல் தோழா, அழியா வரங்களோ, வளமாய் வாழ முடியாதோ, வந்துவிட்டோம், சரித்திரம் புதிதாய் படைத்திடுங்கள், யுத்தமதைத் திணிக்காதே, எழுந்துவா நிமிரலாம், உரமேறிய உணர்வுகள், இனிய தோழனே, குடிமக்கள், ஜனநாயகம், பாட்டாளி, இனி ஒரு விதி சமைப்போம், சோஷலிசம், அபேட்சகன், வேண்டாம் வெளிநாடு, காலம் வரவேண்டும்,  துர்ப்பாக்கிய நிலை, இந்திய வம்சாவளியினர், தேசத்துக்குரியவர்கள், நம்மவர்கள், அரசியல்வாதி ஆகிய தலைப்புக்களில் அமைந்த உணர்ச்சிக் கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84625).

ஏனைய பதிவுகள்