குறிஞ்சிநாடன் (இயற்பெயர்: க.வெள்ளைச்சாமி). கண்டி: ஞானம் பதிப்பகம், 19/7, பேராதனை வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
மலையகக் கவிஞர் தமிழ்மணி குறிஞ்சி நாடன் கண்டியைச் சேர்ந்தவர். கனவு காண்பது மனிதரின் இயல்பென்பர். குறிஞ்சிநாடனும் கனவு காண்கிறார்- தன் கவிதைகளின் வழியாக. எமது நாட்டில் ஏமாற்றும் சுரண்டலும் ஏற்றத்தாழ்வும் அறியாமையும் இன மோதல்களும் ஒழிந்ததும் நேர்மையும் சமாதானமும் ஒற்றுமையும் சமத்துவ நீதியும் ஓங்கியதுமான மானிடம் பயனுறத்தக்க ஓர் உலகினைக் கனவு காண்கிறார். மலையகம் சகல வாய்ப்புகளும் வளங்களும் பெற்று மேம்படும் ஒரு நிலையினை அவர் அவாவுகின்றார்.