நிந்தவூர் ஷிப்லி. அம்பாறை: நிந்தவூர் ஷிப்லி, 50, ஹாஜியார் வீதி, நிந்தாவூர் 18, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202ஃ2டீ, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்).
xx, 78 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-51608-0-3.
முதல் கவி என் அன்னைக்கே எனத் தொடங்கி கனவுகள் பூத்துக் குலுங்கும் அதிகாலை என்ற கவிதை ஈறாக இந்நூலில் தன் 30 கவிதைகளை வழங்கியிருக்கிறார் நிந்தவூர் ஷிப்லி. என் தேசத்தில் இது கிளையுதிர் காலம், எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி, இரத்த சாசனம், தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம் என இவரது கவிதைகளில் ஈழத்தின் போர்க்காலச் சூழல்கள் விரிவாகப் பதிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 213170).