9619 நாணலின் கீதை.

செம்பியன் செல்வன். யாழ்ப்பாணம்: எஸ்.முருகானந்தன், அபிராமி பதிப்பகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஜுன்1982. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி).

xii, 42 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 17.5×12.5 சமீ.

அபிராமி பதிப்பகத்தின் முதல் வெளியீடாக ஆத்மாவின் இதயக் கதவுகளைத் தட்டியெழுப்பும் உள்ளொளி உணர்வூற்று உருவகச் சித்திரங்களாக நாணலின் கீதையின் படைப்புக்கள் அமைந்துள்ளன. தத்துவார்த்த சிந்தனைகளாக மாத்திரம் அமையாது, அழகிய அர்த்தபூர்வமான கவிதை நடையில் இவை எழுதப்பட்டுள்ளன. ஒரு கிளிஞ்சலின் கீதம், முள்ளும் மலரும், துடுப்பில்லாத படகு, வலைக்கண்ணிகள், முட்கள் ஒடியும் ஓசைகள், வேட்டைக்காரன், சந்நிதி குண்டம், சிரிப்புப் பிரசாதம், இருளின் ஒளி, புல்லின் பூக்கள், நாணலின் கீதை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 69066).     

ஏனைய பதிவுகள்