மு.சடாட்சரன். கல்முனை: நவீனன் வெளியீடு, 69D, பிரதான வீதி, பெரிய நீலாவணை 01, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்).
(24), 71 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44061-0-0.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணைப் பகுதியில் வாழும் கவிஞர் சடாட்சரனின் கவிதைத் தொகுதி. இளைப்பாறிய பாடசாலை அதிபரான இவரது 42 கவிதைகள் கொண்ட இத்தொகுதியில் பாடுபொருட்களாக விலங்கினம், இயற்கை, நிலம், சூழல் போன்ற சம்பிரதாயமான விடயங்கள் மாத்திரமன்றி ரயில் வாழ்க்கையின் இனிமை, மழைக்காலம், போன்ற விடயங்களும் இவரது பார்வைக்கு எட்டுகின்றன. கவிதைகள் அனைத்தும் கட்டுக்கோப்புடன் சொற்செட்டும் நீரோடை போன்ற ஆற்றொழுக்கும் செயலின் விளைவை ஈற்றில் காட்டியும் கவித்துவமாய் முடிகின்றன. ஏற்கெனவே மேட்டுநிலம் என்ற இவரது சிறுகதைத்தொகுதி வெளிவந்து பாராட்டைப்பெற்றது. சிறந்த கவிதைத்தொகுதிக்கான 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது, இந்நூலுக்கு 11.9.2013 அன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.