9640 வானம் விழுந்த நெல்வயல்.

கை.சரவணன். யாழ்ப்பாணம்: கைசன் வெளியீட்டகம், அளவெட்டி மத்தி, அளவெட்டி, 1வது பதிப்பு, புரட்டாதி 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

vi, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54659-0-8.

கை.சரவணன் தொன்னூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். இக்கவிதைத் தொகுதியே இவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். இவரது கவிதைகள் காலத்தின் இயக்கத்தினையும் அதன் நிலைப் புள்ளியறுந்த மனத்தையும்  பாடுபொருளாகக் கொண்டவை. போர் மறைத்துப்போன சாதாரண மனிதர்களின் மறைப்பேதுமற்ற வாழ்வினையும் சமூக அசைவியக்கத்தினையும் இவர் படிமங்களாகக் காட்சிப்படுத்துகின்றார். போருக்குப் பின்னான உடனடிப்  படைப்புகள் என்ற வகையில் இக்கவிதைத் தொகுதி வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  228957). 

ஏனைய பதிவுகள்