9643 வைகை.

வை.க.தவமணிதாசன். யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்).

viii, 64 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

எம்மூர், என்னாலே, பூமாது கருவுற்று, வேள்விப் பொங்கல், தை இருபத்தாறு, முழுப்பிழை, வைகை, பௌத்த தர்மம், மரண வாசல்கள், விற்பனைக்குண்டு, எம்மண் முகாம், ஒளவை சிலை, கிளாலியில், விறகுச்சுமை போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பெற்ற கவிதைகள் இந்நூலை அழகுபடுத்துகின்றன. இக்கவிதைத் தொகுதியில் விஞ்ஞானக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்ட சில கவிதைகள் உள்ளன. எயிட்ஸ் நோய் பற்றி ஓர் போர்க்கள நிலையை வைத்துக் கவிதை செய்துள்ளார். ஒளவையார் அணுக்கொள்கை ஒரு புதிய நோக்கிலமைந்த கவிதையாக இருக்கின்றது. சமூக சமத்துவம் பற்றிக் குறிப்பிடும்போது, ‘சமத்துவத்தைப் பிளாவினிலே வளர்த்தாய் வாழி’ என்னும் அடிகள் அக்கருத்தை உள்ளத்தில் ஆழ ஊன்றி விதைக்கின்றது. 1974 மாசியில் எழுதிய அசல் அரிசி, நாம் பட்ட உணவுப் பஞ்சத்தை நினைவூட்டுகின்றது. கவிஞர் கந்தசாமி தவமணிதாசன் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, வேலணை மத்திய மகாவித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். குண்டசாலை விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். விஞ்ஞானப் பயிற்சி பெற்ற இவர் அநுராதபுர மாவட்டத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கியவர். பின்னாளில் யாழ். இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  118686). 

ஏனைய பதிவுகள்

Top 10 Online Casino Sites

Content Researching Online Casinos And Choosing One: red baron big win Top 10 Real Money Online Casinos In The Usa 2024 The Most Popular Casino

9208 சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மானிப்பாய்: மு.கந்தையா, சுதுமலை, 1வது பதிப்பு, ஜுலை 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). xxiv, 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. பண்டிதர் மு.கந்தையா