9684 சம்பந்தன் சிறுகதைகள்.

சம்பந்தன் (மூலம்), செங்கைஆழியான், செம்பியன்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: இலங்கை இலக்கியப் பேரவை வெளியீடு, 82, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

146 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×12.5 சமீ.

ஈழத்துச் சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கு உரமூட்டிய திருமூலர்களுள் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோருடன் க.ஞானசம்பந்தனும் இணைந்து போற்றப்படுகின்றார். 1913இல் பிறந்த இவர் சம்பந்தன் என்ற பெயரில் படைப்புலகில் தன் 25ஆவது வயதில் அறிமுகமாகியவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியாற்றியவர். 1930-1950 காலகட்டத்தில் இவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மகாலட்சுமி (கலைமகள்), மதம் (கலைமகள்),சலனம் (கலைமகள்),விதி (கலைமகள்ஃகதைக்கோவை), தூமகேது (கலைமகள்), இரண்டு ஊர்வலங்கள் (மறுமலர்ச்சி), அவள் (மறுமலர்ச்சி), துறவு (கலைமகள்), சபலம் (கலைச்செல்வி), பிரயாணி (ஈழகேசரி) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்