9750 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம் திருவடிசூட்டுப் படலம்: க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரியது.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி வீதி).

vi, 160 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 17.5×12.5 சமீ.

1996 தொடக்கம் க.பொ.த. உயர்தர தேர்வுக்குரிய பாடநூல்களுள் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ள இராமாயணத்தின் ஒரு பகுதி இதுவாகும். கைகேயி தசரதனிடம் பெற்ற வரங்களாலே இராமன் காடாளவும் தான் அரசாளவும் நேர்ந்த கொடுமையைப் பொறுக்கமுடியாத பரதன் இராமனைத் தேடிக் கானகம் செல்கிறான். சித்திரகூடமலையில் அவனைக் கண்டு மீண்டும் வந்து நாடாள வேண்டுகின்றான்.  ராமன் அதனை மறுக்கவே அவனது பாதுகைகளைப் பெற்றுவந்து நந்திக்கிராமத்திலே அவை (பாதுகைகள்) செங்கோல் நடாத்தத் தான் துறவு மேற்கொள்வதுமாகிய சம்பவங்களை திருவடிசூட்டுப்படலம் விவரிக்கிறது. ஆசிரியர், இப்படலத்தின் 141 பாடல்களையும் தந்து அவற்றுக்கான பதப் பிரிப்பையும் தொடர்ந்து பாடற்பொழிப்பையும் தருவதுடன், ஒவ்வொரு பாடலிலுமுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருளும் சிறுவிளக்கங்களும் தந்து பாடல்களை எளிதில் மாணாக்கர் புரிந்துகொள்ள வைத்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 130143).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Massachusetts Sports Betting

Content What Is The Minimum And Maximum Stake For A Mobile Bet In Sports?: Queen of the Nile Download $1 deposit Live: Bets On Sports