9763 திருக்குறள்:அங்கவியல்.

பாலசுப்பிரமணியம் பத்மநாதன். யாழ்ப்பாணம்: சித்திர பவனம், ஏழாலை வடக்கு, ஏழாலை, 1வது பதிப்பு, ஜூலை 2009. (கொழும்பு 13:  கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

vi, 111 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51740-1-5.

கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் 2009 ஆம் ஆண்டு முதல்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மொழி-புதியபாடத்திட்டத்தில் திருக்குறளிலே- அங்கவியலில் உள்ள அமைச்சு தொடக்கம் அவை அஞ்சாமை வரையான பத்து அதிகாரங்கள் விதிக்கப்பட்ட பாடப்பரப்புக்களுள் அடங்குகின்றன. தரம் 12 மாணவர்களுக்கு அமைச்சு, சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம்,  வினை செயல்வகை, தூது ஆகிய அதிகாரங்களும், தரம் 13 மாணவர்களுக்கு மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களும் உரிய திருக்குறள் பாடப்பரப்புகளாக விதிக்கப்பட்டுள்ளன.  மாணவர்கள் இலகுவாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்நுல் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள பத்துக் குறட்பாக்களுக்கும் பதப்பிரிப்புகளும் பொழிப்புரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்துக்குமான வினாக்களும் அவற்றுக்குப் பொருத்தமான விடைகளும் வழங்கப்பட்டுள்ளன.  திருக்குறளுக்கு பொருள் எழுதும் முறையும் சிறப்பு எழுதும் முறையும் இந்நூலில் காட்டப்பட்டிருக்கின்றது.  பயிற்சி வினாக்களும் இந்நூலில் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

13203 உண்மை விளக்கம்.

சு.கனகரத்தினம். கொழும்பு 13: வைத்திய கலாநிதி சு.கனகரத்தினம், 82/112, ஸ்ரீ இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. வாழ்க்கையில் நிம்மதியைத்