ஏ.இக்பால். வேர்வலை: பேசும் பேனா பேரணி. 26/6, ஷெய்க் முஸ்தபா பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1990. (கொழும்பு 2: கிரஸன்ட் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், 90 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை).
xxxii, 136 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 22×14.5 சமீ.
முன்னாள் சபாநாயகரும், முதலாவது முஸ்லீம் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் அவர்களுடைய வாழ்வும் பணிகளும்பற்றிய ஒரு நடுநிலைப் பார்வை. பேருவளையில் பிறந்த இவர் உள்ளுராட்சி அரசியலில் நுழைந்து நகரசபைத் தலைவராகி, பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகிப் படிப்படியாக அரசியலில் முன்னேறியவர். களுத்துறை நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக இருந்தவேளையில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற மனிதாபிமானம் கொண்டவர். கிழக்கிலங்கையின் சூறாவளித் தாக்குதலின் போது வீடிழந்தவர்களுக்கு 100 வீடுகளை ஈராக் நாட்டின் உதவியுடன் கட்டிக்கொடுத்து, அப்பிரதேசத்தை சதாம் ஹூசெய்ன் கிராமம் என்று பெயரிட்டு வைத்தவர். இப்பெரியாரின் அமரத்துவமான வாழ்வு இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வைகறைக் கும்மிருட்டு, உதய ஒளிக்கீற்று, மலையடிவார மாணிக்கம், பட்டைதீட்டிய பளபளப்பு, ஊரைச்சுற்றிய ஒளி, ஒளிபரப்பிய பகலவன் என இன்னோரன்ன 15 அத்தியாயத் தலைப்புகளில் கவிஞர் ஏ.இக்பால் இந்நூலை வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 108123).