9937 இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்: முதலாம் பாகம்: கி.பி.1505 வரை.

மு.இளையதம்பி. காரைநகர்: மு.இளையதம்பி, சரித்திர ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி, 5வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1955, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1961, 4வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(5), 127 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.25, அளவு: 17.5×12.5 சமீ.

இந்நூலின் இரண்டாம் பாகம் 1505-1796 காலகட்டத்துக்குரிய வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருந்தது.  பின்னர் 1955இல் இந்த முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. கி.பி. 1505 வரையுள்ள இலங்கைச் சரித்திரத்தையும் உலக சரித்திரத்தையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இலகுவான வசன நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் அப்பியாசங்களும் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பூர்வீக இலங்கை, சிங்களரின் வருகை, பௌத்த சமயமும் அது இலங்கைக்கு வந்த வரலாறும், தமிழரின் வருகை, எல்லாளனும் துட்டகெமுனுவும், கீர்த்திபெற்ற சிங்கள மன்னர்கள், குப்தர் ஆளுகையும் இலங்கையிலேற்பட்ட கலை வளர்ச்சியும், நிர்வாக அமைப்பும் வாழ்க்கை முறையும், சிங்கள அரசர்கள் (கி.பி 460-496), யாழ்ப்பாணம், தென்னிந்தியாவில் பல்லவரின் ஆட்சி, இலங்கையில் சோழ அரசர்களின் ஆதிக்கம், சோழ அரசர்களுக்குப் பின் ஆண்ட சிங்கள அரசர்கள், நிர்வாக முறையும் மக்களின் வாழ்க்கையும், பிற்காலச் சிங்கள அரசர்களும் சிங்கள அரசின் வீழ்ச்சியும் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இந்நூலில் வரலாறு விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசித்தவர்.

ஏனைய பதிவுகள்

15245 இயல்பு மீறிய குழந்தைகள்.

முருகு தயாநிதி. மஹரகம: சோபிஜயஹரி, முருகு தயாநிதி, சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xiv, (5), 109