9110 அர்ச். மத்தேயு எழுதிய யேசுக் கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்.

அர்ச. மத்தேயு. யாழ்ப்பாணம்: அர்ச்.சூசைமாமுனிவர் பதிப்பகம், 2வது பதிப்பு, 1965. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1959. (யாழ்ப்பாணம்;: அர்ச்.சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).

110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மத்தேயு என்பது  கடவுளின் கொடை  என்ற கருத்தையுடைய எபிரேய பெயராகும். இப்பெயர் மத்தேயு சுவிசேஷத்தின் 10ம் அதிகாரம் 9ம் வசனத்தில் முதலில் காணப்படுகின்றது.  இவரே பின்னாளில், மாற்கு , லூக்காஸ் சுவிசேஷங்களில் லேவி என்று அழைக்கப்படுகின்றார். முதலாம் சுவிசேஷம், அர்ச் மத்தேயுவினால் எழுதப்பட்டதென்பதையும், சுவிசேஷகர் தம் நாட்டு மக்கள் யேசுநாதரின் தெய்வத் தன்மையை அறிந்து, அதன்பேரில் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காகவே எழுதினார் என்பதையும் பரிசுத்த பாரம்பரியம் முதலாம் நூற்றாண்டு தொடக்கமே காப்பாற்றி வருகின்றது.

ஏனைய பதிவுகள்

14791 போரும் அமைதியும் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா