ந.சி.கந்தையா. சென்னை 1: காமராஜ் பதிப்பகம், 1, கந்தப்பன் தெரு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1938. (சென்னை: உதயம் அச்சகம்).
xii, 148 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 20×13.5 சமீ.
மக்களினம் சம்பந்தமான ஆய்வுக்குப் பயன்படும் இந்நூல் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வெளிவந்த நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்களின் பொதுவான பழக்க வழக்கங்களைக் கூறுவதுடன், ஒவ்வொரு கூட்டத்தினரிடையேயும் உள்ள தனித்துவமான பழக்கவழக்கங்களை விரிவாக இந்நூல் கூறுகின்றது. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், வட இந்தியக் குலங்களும் குடிகளும் ஆகிய இரு இயல்களைத் தொடர்ந்து மூன்றாவது இயலாக ஆசிரியர் இலங்கைத் தமிழர் பழக்கவழக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். இப்பிரிவில் திருமணம், மரணம், புத்தளம் கரையார், அணிவகை, ஆடவர் அணிபவை, பெண்கள் அணிகள், இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள், மாட்டுக் குறிசுடும் அடையாளங்கள், சாதிகளின் பட்டப்பெயர்கள் ஆகிய உப தலைப்புகளில் இப்பிரிவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46001).