சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011.(யாழ்ப்பாணம்: ஆந்திரா டிஜிட்டல் பிரிண்டர்ஸ்).
vii, 50 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 ச.மீ., ISBN: 978-955-51477-2-9.
வங்கி மேலாளரான சி.குமாரலிங்கம், இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்ட முற்போக்குச் சிந்தனையாளர். இந்நூலில் உலகமயமாதல், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், அபிவிருத்தி, கர்லோ குய்லானி, உலகமயமாதல்-நன்மைகள் பெருத்தன-தீமைகள் மலிந்தன, சோளம், செவ்விந்தியர், பட்டினி உலகம், குளிர்பானங்கள், ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி கண்ணே, சொர்க்கத்திலிருந்து நரகம் வரை, மார்க்கோ போலோ, வாஸ்கொடகாமா, ழுடெiநெ ஊழஅpரவநசஇ மூளை உருவானது, சாதி உருவானது, உயர்ந்தவர்கள், அழகின் விதிகள், அழகின் பெருமை, டீசுஐஊஇ பெண் விடுதலை, அமர்த்திய சென், பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால், நான்காவது உலகம், துயஉம ழக யடட வசயனநள ஆயளவநச ழக ழேநெ, உலக வங்கியின் இரண்டு முகங்கள், பயிற்சிப் பட்டறை, சாலை நெடியது, சோறு, பாலஸ்தீன கவிதை, திருமதி டில்மா றவுசெல்ப், வேகநடை, கார்ள் மார்க்ஸ், ஜோர்ஜ் வாஷிங்டன், சேர். வின்ஸ்ரன் சேர்ச்சில், மார்க்கிரட் தச்சர், ஜெனரல் சார்ள்ஸ் டி கோல், சைக்கிள் செயின் ஆகிய 41 தலைப்புகளில் அறிவியல் தகவல்களை கவிதைவடிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். உலகமயமாதல் உலகைக் குக்கிராமமாக மாற்றியுள்ளதை மேலோட்டமாகப் பார்த்தாலும், அதனால் அபிவிருத்தி அடைந்திராத வறிய நாடுகள் கண்ட இழப்புகளே அதிகம் எனக்காண முடிகின்றது. பெண்களின் விடுதலை பற்றி மிக அவதானமாக எழுதுகின்றார். உலகத்தலைவர்கள் சிலரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளைப் பதிவுசெய்கிறார். சோவியத் ரஷ்யா முதலாளித்துவவாதிகளின் கபட நடவடிக்கைகளால் சிதைந்துபோனதையும் பதிவுசெய்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51170).