9302 இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்புகளும்.

சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(4), 42 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-402-7.

பிரித்தானியர் இலங்கையர் கைகளில் வழங்கிய அதிகாரங்கள் அனைத்து மக்களிடமும் வழங்கப்படவில்லை.  மாறாக, சிங்கள சமூகத்தின் அதிகார வர்க்கத்திடமே வழங்கப்பட்டது. இதனால் அதிகாரக் கைமாற்றத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து அகற்றப்படும் நிலையும் அதிகரித்தது.  இந்த அதிகாரத்திலிருந்து அகற்றும் செயன்முறை 1921ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தில் தொடங்கி 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் உச்சநிலை பெற்றது. 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பொறுத்தவரை ஒரு மூடிய யாப்பாகவே உள்ளது. யாப்பில் பன்மைத்தன்மையை உருவாக்க வேண்டுமாயின் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு, வாளேந்திய சிங்கக் கொடி, பௌத்த மதம் முதன்மை மதம் என்பவற்றில் திருத்தங்கள் தேவை. ஆனால், இதற்கு பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையும், மக்கள் தீர்ப்பு ஒன்றின்மூலம் மக்களின் சம்மதமும் அவசியம். இவை நடைமுறையில் சாத்தியமற்றவையாகும். எனவே, அரசியல் யாப்பு மூடப்பட்ட நிலையில் யாப்பிற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வு முயற்சிகளில் இறங்கவேண்டியுள்ளது. இந்நூல் அறிமுகம், டொனமூர் அரசியல் யாப்பு (1931), சோல்பரி யாப்பு (1947), முதலாவது குடியரசு அரசியல் யாப்பு (1972), 2வது குடியரசு ஆட்சி யாப்பு (1978), முடிவுரை ஆகிய ஆறு இயல்களில் இவ்விடயங்களை ஆழமாக ஆராய்கின்றது. நூலாசிரியர் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை பட்டதாரி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  அரசறிவியல்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

15240 சூழலியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு ஏப்ரல்; 1997. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு). (6), 127 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: