சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
62 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-410-2.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எந்தவகையிலும் உதவமுடியாத இத்திருத்தச்சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்திய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றபோதிலும், ஈழத்தமிழ் மக்களால் ஆரம்பம் முதலே 13வது திருத்தச்சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாக எதிர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்நூல் 13வது திருத்தச்சட்டத்தின் சாதக பாதகங்களைப்பற்றி ஆய்வுசெய்கின்றது. இந்நூலில், அறிமுகம், மாகாணசபை முறையின் அடிப்படைத் தவறுகள், 13வது திருத்தமும் இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படைகளும், அரசியல் தீர்விற்கான சர்வதேச அனுபவங்கள், முடிவுரை ஆகிய 5 அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பின்னிணைப்பாக இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேச அனுபவங்கள், 13வது திருத்தம் பற்றி சிங்கள ஆய்வாளர் சிலரின் கருத்துக்கள் ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.