சு.செல்லத்துரை (பிரதம தொகுப்பாசிரியர்). கொழும்பு: சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம், புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம், 1வது பதிப்பு, ஜுலை 2013. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
465 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.
பேராசிரியர் சபா.ஜெயராசா, உடுவை சி.தில்லைநடராஜா, க.சண்முகலிங்கம் ஆகியோரை மதியுரைஞர்களாகவும், வி.இராஜேந்திரம் அவர்களை உதவி ஆசிரியராகவும், செ.சந்திரகுமாரை நிழற்படத் தொகுப்பாளராகவும், பன்னிரு நூற்குழு அங்கத்தினர்களையும் இணைத்துக்கொண்டு கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் பிரதம ஆசிரியராக இருந்து இந்த நூலை உருவாக்கியுள்ளார். அணிசேர் விடயங்கள், எழுச்சித் தந்தை ஆர்.எம்.நாகலிங்கம் அவர்களின் கல்வி, தொழில், தலைமைத்துவப் புலமைகள், எழுச்சி இயக்கம் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள், செயற்பாடுகள், எழுச்சி இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், சான்றோர்கள், சாதனையாளர்கள், புலமைப் பரிசில் பெற்றோர், இணைப்புக்கள் ஆகிய ஐந்து பகுதிகளில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234208).