சித்திரலேகா மௌனகுரு (பதிப்பாசிரியர்). செங்கலடி: மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்-இலங்கை, வந்தாறு மூலை, 1வது பதிப்பு, 2004. (கல்முனை: கோல்டன் ஓப்செட் அச்சகம்).
xi, 221 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையினரால் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23,24ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட இருநாட் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் பெரும்பாலானவற்றின் தொகுப்பு இது. இக்கருத்தரங்கின் நோக்கம், மட்டக்களப்பு நாட்டார் வழக்கியலின் ஒரு கூறான வாய்மொழி மரபுகள் பற்றி ஆராய்வதுடன் இவ்வாய்மொழி மரபுகளை வரலாற்றுடன் இணைத்து நோக்குவதும் மட்டக்களப்பின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றை விளங்கிக் கொள்வதில் அவை வகிக்கக்கூடிய பங்கினைப் பரிசீலிப்பதுமாகும். மட்டக்களப்புச் சமூகம், அதன் வரலாறு ஆகியவை குறித்து, ஆய்வு செய்வதில் நாட்டார் வழக்காற்றியலையும் வாய்மொழி மரபுகளையும் பயன்படுத்தும் முறையியல் பற்றிய விவாதங்களைத் தூண்டும் நோக்கில் இத்தொகுப்பு அமைந்துள்ளது.