தமிழரசி சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்). லண்டன்: தமிழரசி சிவபாதசுந்தரம், 18 Elms Gardens, Harrow, HAO 2RU, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (சென்னை 600 017: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், 10/2 (8/2), போலிஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர்).
192 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-83067-09-1.
இத்தொகுப்பில் சுருக்கமாக எழுதப்பட்ட 90 நாட்டாரியல் கட்டுரைகள் உள்ளன. அனைத்தும் ஈழத்து நாட்டுப்பாடல்களை விளக்குவதாயுள்ளன. இப்பாடல்களை நூலாசிரியரின் தந்தையார் பண்டிதர் மு.ஆறுமுகனார் அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் 1936ஆம் ஆண்டு முதல் தேடித்தொகுத்துப் பதிந்து வைத்திருந்தார். அத்தகைய தேட்டமான 3000க்கும் அதிகமான நாட்டுப்பாடல்களில் கைக்கெட்டிய பாடல்களை சுவையான இலக்கியநயம்மிக்க விளக்கங்களுடன் இக்கட்டுரைகளில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.