ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்). யாழ்ப்பாணம்: ஆ.தேவசகாயம்பிள்ளை, 885/2, கடற்கரை வீதி, பாஷையூர், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
xii, 102 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
புலவர் செகராசசிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படும் முத்தாரக் கவிஞர், பாஷையூர் கூத்துப் புலவர், ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை இயற்றிய நாட்டுக்கூத்து. கிறிஸ்தவக் கூத்து மரபுக்கென திட்டவட்டமான அமைப்பு உண்டு. புலவர் அவர்கள் அந்த மரபு தவறாது பாத்திரங்களை தோற்றுவித்து, அந்த மரபுக்குரிய கதைப் பின்னலின் அடிப்படையில் கிறிஸ்தவத்தின் மேன்மையை நிலைநாட்டும் இந்த நாடகத்தை எழுதியுள்ளார்.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115412).