மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: பிரேமரஜனி சிங்கராயர், தமிழ்மதி, 955/9, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2007. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
xi, 81 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.
ஆசிரியர் முடியப்பு சிங்கராயர் இலக்கியத் துறையில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் உடையவர். யாழ்ப்பாணத்தில் பாஷையூரில் பிறந்த இவர் 20 வயதில் எழுத்துத்துறையில் புகுந்தவர். தூது போ தென்றலே, வியாகுல அன்னை வெண்பா, மடு அன்னை பிள்ளைத்தமிழ் ஆகிய மறைத்தத்துவம் பொதிந்த தமிழ் இலக்கியப் படைப்புகளை வழங்கிய சிங்கராயரின் கைவண்ணத்தில் மலர்ந்த மற்றொரு படைப்பு இது. நாட்டார் வழக்கியலில் வழங்கிவந்த அருளப்பர் வரலாற்றை நாட்டுக்கூத்து வடிவில் ஆசிரியர் தந்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 186186).