ம.யேசுதாசன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.பிரஸ், 464, ஆஸ்பத்திரி வீதி).
xiv, 62 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-9262-29-7.
ஆசிரியர், இசைக்கலைஞர், நாடக நெறியாள்கை வல்லுநர் எனப் பல பரிமாணங்களுடையவர் அண்ணாவியார் யேசுதாசன். பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு சிம்சோன், இப்தா ஆகிய இரு கதாநாயகர்களின் நாடகங்களை இந்நூலில் வழங்கியுள்ளார். தென்மோடி நாட்டுக்கூத்தாக அமையும் ‘மானம் காத்த மறவன்’ என்ற முதல் நாடகத்தின் இஸ்ரேல் மைந்தன் சிம்சோன் தன் பரம எதிரிகளான பெலஸ்தியரை அழிப்பதற்குக் கர்த்தரால் அனுப்பி வைக்கப்பட்டவன். இஸ்ரேலரின் மானம் காத்த மைந்தனாகப் போற்றப்படுகிறான். இசை நாடகமாக அமைந்த ‘சத்தியசோதனை” என்ற இரண்டாவது நாடகம் இஸ்ரேலரின் நீதித் தலைவனாகிய இப்தா தமது எதிரிகளாகிய அம்மோனியரை எதிர்த்து வெற்றிகொண்டபோதும் ஒரு சத்திய சோதனைக்கு உள்ளாகவேண்டி ஏற்படுகின்றது. இரண்டு நாடகங்களும் துன்பியல் நாடகங்களாக அமைகின்றன. அறம்-மறம், உண்மை-பொய்ம்மை போன்ற எதிரெதிர் பண்புகளின் விளைவுகளை நாடகாசிரியர் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 177054).