நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசம் மதுரவாசகம், 22, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், பிரதான வீதி).
viii, 128 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
பாஷையூர்ப் புலவர் மதுரகவி நீ.மிக்கோர்சிங்கம் யாழ்ப்பாணத்தின் இசை நாடகக் கூத்து மற்றும் அரங்கியல் உலகில் பிரபல்யமானவர். அலேசு, சத்தியவந்தன், கண்டி அரசன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆயுள்வேத வாகடசாமிநாதர், ஞானரூபன் ஆகிய நாட்டுக்கூத்துகளையும், திருச்செல்வர், புனித அந்தோனியார், மதியானந்தன், ஆனந்தசீலி, பரமபிதாவின் பத்துக்கட்டளை ஆகிய இசைநாடகங்களையும் எழுதியவர். கிறிஸ்தவ இறையியலின் பின்னணியில் புனித கிறிஸ்தோப்பரின் வாழ்வின் சில சம்பவங்களைத் தேர்ந்து நாட்டுக்கூத்துருவில் வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233905).