எஸ்.பீ.ஆர்.சீர்மாறன். திருநெல்வேலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுகாதார நிலையம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்).
xix, 105 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ.
நமது சூழலில் உள்ள பொதுவான நோய்களும் அவற்றைத் தடுப்பதற்கான அல்லது குணப்படுத்தலுக்கான ஆலோசனைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதற் பாகத்தில் குழந்தையின் உடலும் உள்ளமும், தடுப்பூசிகள், வயிற்றோட்டம், ஏற்புவலி, நியுமோனியா, மூளைக்காய்ச்சல், பற்கள், உடன்காயம் (Traumatic Injuries) ஆகிய எட்டு விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் நோய்த்தடுப்பு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நீர், கொலரா, கல்லடைசல், சுவாசத் தொகுதி, புகைபிடித்தல், வாய்ப் புற்றுநோய், மார்புப் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், கோமா, நீரிழிவு, இரத்த சோகை, இரத்ததானம் ஆகிய 12 விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானரீதியான ஆலோசனைகளும் இந்நூலில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. நூலாசிரியர் வைத்திய கலாநிதி சீர்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய அலுவலராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104898).