இளங்கம்பன் பழநி. யாழ்ப்பாணம்: குலபதி ஆறுமுகம் கந்தையா, அஷ்டலட்சுமி வெளியீடு, சிவா பிறின்டர்ஸ், கைதடி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி ஒழுங்கை ).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 25., அளவு: 20×14 சமீ.
எதையும் பேசும், எதனோடும் பேசும் கற்பனை மிக்க குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ள அனைத்தோடும் உறவாட முனைவது இயல்பே. இயற்கை-செயற்கை என எல்லாப் பொருள்களோடும் உறவாட நினைக்கும் குழந்தையின் தொடர்பாடலுக்கு இக்கவிதைகள் பக்கத் துணையாகின்றன. குழந்தைகளின் கற்பனாசக்தியையும், மேலான உணர்வுகளையும் மனதில் பதியம்வைக்க இப்பாடல்கள் உதவுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116104).