சிதம்பரபத்தினி (இயற்பெயர்: பத்தினியம்மா திலகநாயகம் போல்). யாழ்ப்பாணம்: திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல், மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).
xiv, 30 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54502-1-8.
சிறுவர்களுக்கேற்ற பாடல்களின் தொகுப்பு இது. முதலையும் குரங்கும், கீரியும் மனிதனும், சிங்கமும் முயலும், பொறுமையின் பரிசு போன்ற பரம்பரை வழிவந்த கதைப் பாடல்களும், சமயச் சொற்பொழிவுகளின்போது கேட்கப்பெறும் பாம்பும் முனிவரும் என்ற கதைப்பாடலும் குறிப்பிடத்தக்கவை. நாயும் பூனையும் என்ற பாடல் தாயன்பு இனம்கடந்து தொழிற்படும் ஓர் அற்புதத்தைச் சொல்கின்றது. மாலையிற் கடற்கரை என்ற பாடல் இறுதியாக அமைந்து இத்தொகுதியை நிறைவுசெய்கின்றது. இயற்கை பற்றிய அற்புதமான கவிதை இது. அனைத்துப் பாடல்களிலும் பிள்ளைகளின் அனுபவப் பரப்புக்குள் வரக்கூடிய செய்திகளையே கவனமாகத் தேர்ந்து பொதித்து வைத்திருக்கின்றார் அனுபவம்மிக்க இந்நூலாசிரியர்.