ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீடு, 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(3) 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 40., அளவு: 21×15 சமீ.
பட்டம் கட்டி ஆடுவோம் என்ற பாடலில் தொடங்கி, எங்கள் அதிபர் என்ற பாடல் ஈறாக, 23 சிறுவர் பாடல்களின் தொகுப்பு இந்நூலாகும். பாடல்களுக்குப் பொருத்தமான சித்திரங்களை ஆசிரியரின் மகன் அருள்பாஸ்கரன் வரைந்து உதவியுள்ளார். பள்ளிச் சிறுவர்க்கான பாடல்களை இயற்றுவதில் வல்லவர் கவிஞர் ச.அருளானந்தம். ‘ஏற்கெனவே அவர் இயற்றி வெளிவந்த பாடல்கள் சிறுவர்களின் மனதில் புத்துணர்ச்சியையும் புது மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதோடு வேகமாகச் சிந்திக்கவும் செயற்படவும் வைத்துக்கொண்டு இருப்பதை எல்லோரும் நன்கறிவோம்’ என இந்நூலுக்கான அணிந்துரையில் உடுவை தில்லை நடராஜா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129705).