அருட்சகோதரி யதீஸ்வரி. தெல்லிப்பழை: அருட்சகோதரி யதீஸ்வரி, துர்க்காபுரம் மகளிர் இல்லம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (மல்லாகம்: ராம்நெற்.கொம்).
160 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20.5×14.5 சமீ.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் துறவுவாழ்வுவாழ்ந்துவரும் அருட்சகோதரி யதீஸ்வரி குழந்தைகளுக்கான நன்னெறி புகட்டும் கதைகளைக்கொண்ட இந்நூலை எழுதியுள்ளார். துர்க்காபுரம் மகளிர் இல்லப் பிள்ளைகளின் அரங்கக்கலை வளர்ச்சியில் இவர் பாரிய பங்களிப்பை வழங்கிவருபவர். தேவஸ்தான வெளியீடாக வெளிவரும் அருள்ஒளி ஆன்மீக மாத இதழில் சிறுவர்களுக்கான நற்சிந்தனைகளை தொடர்ச்சியாக வழங்கிவரும் அருட்சகோதரி யதீஸ்வரி அவற்றில் தேர்ந்த 51 கதைகளைத் தொகுத்து இந்நூலை ஆக்கிச் சிறுவர் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.