9583 கங்கையில் மிதந்துவரும் மனிதக் கவிதைகள்.

சுரேந்தர் தருமலிங்கம் (புனைபெயர்: ஈழகணேஷ்). இலங்கை: புதுக் கவிஞர் அணி, 1வது பதிப்பு 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13.5 சமீ.

ஈழகணேஷ் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு இது. சமகாலப் பிரச்சினைகளை நறுக்குத் தெறித்த  ஒருசில வார்த்தைகளின் மூலம் சுவையான புதுக்கவிதைகளாக்கித் தந்துள்ளார். தேம்ஸ் நதிக் கரை வரை, இதழ்கள் பேசியது, மனிதப் புல், மூன்றாவது யாழ்ப்பாணம், தேசத்துக்குள், அரசியல், அழுத முகங்களில், அமைதியாய் பறந்த வதந்திகள், தேர்தல் கண்ணோட்டம், காதலி இல்லாத கவிதை, இப்போதே இறந்துவிட்ட எதிர்காலத் தலைவர்கள், யாவருக்கும் புகலிடம், கங்கையில் மிதந்துவரும் மனிதக் கவிதைகள், புறாக்களைப் பறக்கவிட்டு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 91861).

ஏனைய பதிவுகள்