9599 காற்று வெளியிடையே.

க.யோகேஸ்வரன் (புனைபெயர்: நெடுந்தீவு யோகேஸ்). யாழ்ப்பாணம்: இசைத்துறை வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்).

56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×12 சமீ.,

இசைத்துறையில் மூன்றாம் ஆண்டு மாணவரான க.யோகேஸ்வரன், குரலிசை பட்டப்படிப்பை பயின்றுவருபவர். ஒரு இசைக் குழுவினைத் தொடர்ந்து நடத்திவரும் இவர் மெல்லிசை, சாஸ்திரீய இசை, சினிமா இசை, நாட்டார் இசை என பல்வேறு வடிவங்களில் தனது இரசிகர்களுக்கு வழங்குபவர். இவரது கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. புனித யாத்திரை, அப்பன்வாழ்ந்த பூமி, வெளிச்சப்பொறி, விடுதிப் பையன், சொல் அரங்கம் என இவரது கவிதைகள் இந்நூலில் விரிகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234741).

ஏனைய பதிவுகள்

11197 கச்சியப்ப சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப்படலம்.

கச்சியப்ப சுவாமிகள் (மூலம்), வ.சிவராஜசிங்கம் (உரையாசிரியர்). பருத்தித்துறை: புலவர் ஆ.பொன்னையா, அல்வாய் மேற்கு, திக்கம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை). x, 182 பக்கம், விலை: ரூபா 100., அளவு: