கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ். யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 2014. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம்).
54 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19×12 சமீ., ISBN: 978-955-4900-04-2.
ஆகாயம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு. சித்தாந்தன், தானா விஷ்ணு, யாத்ரிகன் ஆகியோரின் தொகுப்பு முயற்சியில் உருவான கவிதைத் தொகுப்பு. ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தபோர் ஓய்ந்து துயரத்தையூட்டும் நிகழ்வுகளாக எஞ்சியிருக்கின்ற சூழலில் கடந்த காலத்தின் எரியும் வலியைப் பேசுகின்ற கவிதைக் குரல்கள் இவை. யுத்தம் ஒரு புனித போர்வையினால் சுற்றப்பட்டு நம்பிக்கைகளாலும் நிச்சயங்களாலும் வடிவமைக்கப்பட்டிருந்த காலத்தின் நினைவுகள் நம்பிக்கைகளாகவோ நிச்சயங்களாகவோ அமையாது, அவநம்பிக்கைகளினதும் நிச்சயமின்மைகளினதும் பெருவெளியாக எஞ்சியிருப்பதை இக்கவிதைகள் பதிவுசெய்கின்றன. யுத்தகாலத்தில் புறம் நின்ற மனிதர்களின் குரல்கள் உள் நின்ற மனிதர்களின் குரல்களை தீவிரமாக எதிர்ப்பதையும் இக்கவிதைகள் பதிவுசெய்கின்றன. உள்-புறநிலைப் பார்வைகளின் கலப்புத் தொகுப்பாக இக்கவிதைத் தொகுதியை குறிப்பிடலாம்.