பி.ரி.அஸீஸ். கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை, கிண்ணியா 7, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம்).
81 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.
இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ் அவர்களாவார். இந்நூல் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி, அவர்களது மான்மியங்கள் பற்றிப் புகழ்பாடும் கவிதைகளால் ஆனது. பெருமானார் (ஸல்)அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும், அன்னாரின் மான்மியம் பற்றியும் இக்கவிதைகள் புகழ்பாடுகின்றன.