ச.வே.பஞ்சாட்சரம். செட்டிகுளம்: பாலன் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 1962. (யாழ்ப்பாணம்: தமிழ் நாடு அச்சகம், நாவலர் வீதி).
iv, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், ‘செந்தாமரை மலரே’ என்ற தலைப்பில் தன் முதல் கவிதையை ‘அல்லி”’என்னும் மாத சஞ்சிகையில் எழுதியதன் மூலம் ஈழத்து இலக்கியத்துறையில் கால் பதித்தவர். இலக்கண அமைதியும் மரபு தவறாத அமைப்பும் சந்த இன்பமும் சங்ககால இலக்கியங்களின் ஈடுபாட்டின் காரணமாக மனங்கொண்ட வலுவான சொற்களும் இழைய எழுதுவதில் இவர் புலமைமிக்கவர். தனது இலக்கிய உலகப் பிரவேசத்தின் ஐந்தாண்டுக்காலத்தில் வெளியான காவியமே எழிலி என்ற இந்த நூலாகும். பள்ளிவிட்டுப் பைங்கிளிகள், பிள்ளையில்லாப் பெருந்துயர், அழுதாரைத் தொழுது, செழியர் கையில் கிளியள், நன்றி நினைந்த நவ்வி, விரிந்தமலர் விழைந்த செயல், நூலுங் கசந்ததடி, காதல் வேகம், வஞ்சிக் கடலில் வழங்கிய பேச்சு, தென்றல் புயலாய் வந்தது, சூழ்ச்சியில் வீழ்ச்சி, முறைகண்டு திகில், காதலா கடமையா, கனவில் வந்த காரிகை, துயரில் துணிவு, ஓடாதே இன்பமே, சந்தனச் சாம்பல் ஆகிய 17 அத்தியாயங்களில் இக்காவியம் இயற்றப்பட்டுள்ளது. 1965இல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69104).