செ.குணரத்தினம் (புனைபெயர்: அமிர்தகழியான்). மட்டக்களப்பு: செ.குணரத்தினம், 1வது பதிப்பு, ஜனவரி 1993. (மட்டக்களப்பு: வளர்மதி அச்சகம், 28, லோயிட்ஸ் அவென்யூ).
(8), 52 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18.5×12.5 சமீ.
ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. நெஞ்சில் நிறைந்த நிலா, கனிந்த காதல், ஏழை நிலா, பூமியிலே அவளெனக்கு ஆகிய நான்கு குறுங்காவியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, மட்டிக்களி கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் திருமணத்தின் பின்னர் அமிர்தகழியில் வாழ்ந்தவர். மட்டக்களப்பு கலாசாரப் பேரவையின் இலக்கிய மணி விருதினையும், இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் தமிழ்மணி என்னும் விருதினையும் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102831).