அன்புமணி (இயற்பெயர்: இரா.நாகலிங்கம்). மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (மட்டக்களப்பு: புனிதவளனார் கத்தோலிக்க அச்சகம்).
vi, 166 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12.5 சமீ.
1952 முதல் எழுதிவந்த அன்புமணியின் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். இல்லத்தரசி (வீரகேசரி 27.2.1968), தாய்மை (சிந்தாமணி 21.7.1969), சிலை ஒன்று (சிந்தாமணி 8.5.1969), பொன்னித்தாய் (தினகரன், 20.9.1964), பூர்ணிமா (சிந்தாமணி 2.7.1968), போனால் வராது (வீரகேசரி 16.5.1969), பெரிய மனிதர் (தினகரன் 25.2.1965), காதற் பெண் (தினகரன் 12.2.1966), காதலுக்குக் கண் (வீரகேசரி 9.7.1968), மூன்று பெண்கள் (வீரகேசரி 28.10.1968), பித்தம் தெளிந்தது (வீரகேசரி 17.2.1963), பாடும் மீன் (வீரகேசரி 12.1.1958) ஆகிய 12 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110409).