9672 ஒருவருக்காக அல்ல: சிறுகதைகள்.

து.வைத்திலிங்கம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆனி 2009. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202/2B, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்).

vi, 211 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9396-31-4.

யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்தவர் துரையப்பா வைத்திலிங்கம். 19.01.1939இல் பிறந்த இவர் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். எழுதுவினைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய வைத்திலிங்கம், 1973இல் இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவாகி நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றி, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகி ஓய்வுபெற்றவர். கடமையின் நிமித்தம் சமூகத்தின் பல மட்டங்களைச் சேர்ந்தவர்களோடும் தொடர்புகளைப் பேணிய ஆசிரியர் தனது அனுபவங்களை புனைகதைகளுக்கு அடித்தளமாக்கியவர்.  இந்நூலில் சக்தியின் மகிமை, பிரேமையின் பரிசு, செந்நாக்குகள், எழுச்சியின் குரல், கொள்ளிக்கடன், கலாவதி கறுப்பு, ஆண் என்ற உறவு, உயிரின் பாதி, அஸ்தமனம், நச்சு மரம், கிழக்கு வெளுக்கிறது, கர்மவாதி, மீண்டும் மலரும் பூ, பரிவின் விலை, கால்கள் உள்ளன, நவமக்கா, பலவீனங்கள்,  பிராயச்சித்தம், பிறந்தநாள்வாழ்த்து, நேற்றைய இரவுகளும் நாளைய பகல்களும், தவறுகள் வாழ்கின்றன, கனவுகள் கலைகின்றன,  ஊமைக்காதல், ஒருவருக்காக அல்ல ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் 24 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையானவை அறுபதுகளில் எழுதப்பட்டவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236606).

ஏனைய பதிவுகள்