யோ.கர்ணன். சென்னை 24: வடலி வெளியீடு, B 2/5, டி.என்.ஹெச் பி. தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
126 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ.
இந்நூல் திரும்பி வந்தவன், தமிழ்க்கதை, திரும்பி வந்தவள், கதைகதையாம் காரணமாம், அரிசி, சீட்டாட்டம், வேதாளத்திற்கு சொன்ன கதை, சோசலிசம், பாலையடிச் சித்தர், பாவமன்னிப்பு, சேகுவேரா இருந்த வீடு, ஐயனின் எஸ்.எல்.ஆர், இரண்டாவது தலைவர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. நாலாம் கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளுள் ஒருவரான யோ.கர்ணனின் இயற்பெயர் யோகநாதன் முரளி. படைப்பிலக்கியத்தின் கவிதை, சிறுகதை, குறும்படம் போன்ற தளங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இயங்கிவருபவர். இவரது முன்னைய சிறுகதைத்தொகுதி தேவதைகளின் தீட்டுத்துணி என்ற தலைப்பில் வெளியானது.