9688 சேற்றில் மலர்ந்த தாமரைகள்: சிறுகதைத் தொகுப்பு.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், 29, ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

(4), 70 பக்கம், விலை: ரூபா 6., அளவு: 18×12.5 சமீ.

வ.அ.இராசரத்தினம் அவர்களின் அறிமுகத்துடன் வெளிவந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுப்பில் திருமதி பரமேஸ்வரி யேசுதாசன் எழுதிய சேற்றில் மலர்ந்த செந்தாமரை, திரு.த.யோகராசா எழுதிய கைமாறு, திரு. செல்வ சபாநாதன் எழுதிய புதுரீச்சர் பள்ளிக்குடம் போறா, திரு. சி.வி.குணசேகரம் எழுதிய ஒரு ஆசிரியர் அதிபராகிறார், செல்வி ச.மேரி பெயாற்றிஸ் எழுதிய எதிர்பார்ப்புகள், திருமதி இரஞ்சனி தருமலிங்கம் எழுதிய அவளுக்கு வயது வந்துவிட்டது, திருமதி கோகிலாதேவி மகேந்திரராசா எழுதிய நாளைய உலகின் நாயகர்கள் ஆகிய ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  124695). 

ஏனைய பதிவுகள்

12177 – முருகன் பாடல்: பதினொன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).