சிற்பி (இயற்பெயர்: சி.சரவணபவன்). சிதம்பரம்: திரு.கோ. சுந்தரமூர்த்தி, 50, வடக்குத் தேர் வீதி, 1வது பதிப்பு, மே 1964. (சென்னை 1: ராஜன் எலெக்ட்ரிக் பிரஸ், 7, கங்குராம செட்டித் தெரு).
vi, 136 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.
கலைச்செல்வி சஞ்சிகையின் கௌரவ ஆசிரியராக விளங்கிய சிற்பி- சி.சரவணபவன் அவர்களின் முதலாவது சிறுகதைத் தொகுதி இது. இதில் பிறந்த மண், கோவில் பூனை, நிலவும் நினைவும், திருட்டுப்பணம், நீலப்பட்டு, வெறி முறிந்தது, காதல் பலி, உயிரோவியம், நிறைவு ஆகிய சிறுகதைகள் அடங்கியுள்ளன. இந்நூலுக்கான கருத்துரையை சிற்பியின் ஆதர்ச எழுத்தாளரான எழுத்தாளர் அகிலன் வழங்கியுள்ளார். 28.2.1933இல் பிறந்த நூலாசிரியர் யாழ்ப்பாணம், திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.