ப.விஷ்ணுவர்த்தினி. யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், நல்லூர்).
xiv, 93 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-09-1.
இச்சிறுகதைத் தொகுப்பில், சொந்தமில்லாத பந்தங்கள், திருப்பம், நினைவு நல்லது வேண்டும், ஊமைக்காயம், மெழுகுவர்த்தி, கடவுளின் குழந்தைகள், எந்தையும் தாயும், விட்டுக்கொடுப்பு, விழித்திரு, நாதியில்லாப் பிறவியிலே, மறப்பேனோடி, விட்டில்கள் ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன. 28ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இதிலுள்ள சொந்தமில்லாத பந்தங்கள் என்ற கதை 2010இல் உதயன் பத்திரிகையின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையில் பட்டம்பெற்ற பரணீதரன் விஷ்ணுவர்த்தினி ஜீவநதி இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233247).