எஸ்.சி.இரத்தினசிங்கம் (புனைபெயர்: இந்துமதி). யாழ்ப்பாணம்: ராதவல்லி வெளியீடு, 1வது பதிப்பு, வைகாசி 2006. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், 267, நாவலர் வீதி).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14.5 சமீ.
அணிந்துரை, வாழ்த்துரை, பதிப்பரை, ஆசிரியர் உரை ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜெபவல்லமை, யார் பாவி, சளைக்காத ஜெபவீரர், விசுவாசக் கப்பல், கல்லறைப் பூக்கள், முட்புதரில் பூத்த புதுமலர், மாசில்லாத அன்பு, ஊழியம் ஆகிய எட்டு கிறிஸ்தவ மதம்சார்ந்த கதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. அரியாலை மேற்கில் 1936இல் பிறந்தவர் எஸ்.சி.இரத்தினசிங்கம் . 1957இல் நில அளவைத்திணைக்களத்தில் இணைந்து1990இல் ஓய்வுபெற்றவர். 1960இல் நினைவு என்ற சிறகதைமூலம் இலக்கிய உலகில் அறிமுகமானவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 165507).