9722 கணையாழி.

ரஜனி (இயற்பெயர்: K.V.S.வாஸ்). கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1971. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road).

149 பக்கம், விலை: ரூபா 1.90, அளவு: 18×13.5 சமீ.

இந்நாவல், மித்திரனில் தொடராக வெளிவந்தபின் நூலுருவானது. சென்னை நகரின் பயங்கரக் குற்றவாளியான ஜம்பு, தேசத்துரோகியும் கடத்தல்காரனுமான மூர்த்தியையும் அவனது கூட்டத்தையும் சுட்டுக்கொன்றும் சட்டத்தின் பிடியில் அவனது கூட்டத்தினரை சிக்கவைத்தும் நாட்டைப்பாதுகாக்கிறான். ரஜனியின் பிரபல கற்பனைக் கதாபாத்திரமான துப்பறியும் நிபுணர் சரத்பாபுவும் இந்நாவலில் வருகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  120893). 

ஏனைய பதிவுகள்