9725 திருக்குறள் உரைகதை (நாவல்) வடிவில்.

கேவி.குணசேகரம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்ரேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

304 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-44186-0-8.

திருக்குறளுக்கு விளக்கத்தை நாவல் வடிவில் எழுதும் முயற்சியின் வெளிப்பாடாக இந்நூல் வெளிவந்துள்ளது.  ஏற்கெனவே 1330 குறள் வெண்பாக்களுக்கும் ஏற்ற தனித்தனிச் சிறுகதைகளை எழுதி வெளியிட்டவர் இவர். அறத்துப்பால் (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், வாழியல்), பொருட்பால் (அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்), காமத்துப்பால் (களவியல், கற்பியல்) ஆகிய இயல்களினூடாக இந்நாவல்வழிக் குறள் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 233641).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

9645 சதியா விதியா?(சமூக நாடகம்).

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், கந்த கோட்டம், 1வது பதிப்பு, 1986. (காரைநகர்: பாலா அச்சகம்). (5), 88 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ. க.கயிலாயநாதன் (1922-1993) ஈழத்துத் தமிழ் இலக்கிய