செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 1988. (யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம்).
xii, 80 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 17×12.5 சமீ.
செம்பியன்செல்வனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘அமிர்தகங்கை’ என்ற சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவல் இது. யாழ். இலக்கிய வட்டத்தின் 40வது வெளியீடாக நூலுருவானது. சுரேந்திரன் தன் அலுவலகத்தில் பணியாற்றும் சிங்களப்பெண் சோமாவைக் காதலிக்கிறான். ஜுன் மாதம் நடைபெற்ற காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தினால் கொழும்பில் இனக்கலவரம் வெடிக்கின்றது. அதன் விளைவாக அவர்களது காதலும் வெடித்துச் சிதறுகிறது. 1956ம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் இன்றைய இனப்பிரச்சினைகளை எவ்வாறு உருவாக்கின என்பதே இந்த நாவல் தரும் சமூகச் செய்தியாகும்.