வ.நடராஜன், கனக செந்திநாதன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல.10, பிரதான வீதி).
(4), 44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 19×12.5 சமீ.
இந்நூலில் தமிழ் முரசு, கண்ணன்-விளையாட்டுப் பிள்ளை, தாலாட்டு, ஆடிப்பிறப்பு, மலர்கள், காந்தித் தாத்தா, குழந்தையின் வேண்டுகோள், ஒளவைக் கிழவி, இறைவன் செயல், வாய்மண் வாய்மண், முயலும் வேட்டைநாயும், உடல் நலம் பேணல், பன்றியின் புத்திமதி, காற்று, வாக்குண்டாம் ஆகிய 15 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் இலங்கைக் கல்வித் திணைக்களத்தினரால் இலங்கைப் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் துணைப்பாட நூலாக உபயோகிக்கத் தகுந்ததென 1978ஆம் ஆண்டு தொடக்கம் அங்கீகரிக்கப்பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124693).