க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1979, 1வது பதிப்பு 1961, திருத்திய 2வது பதிப்பு 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(6), 380 பக்கம், விலை: ரூபா 12., அளவு: 21×14 சமீ.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 1979-1980ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியம் (அ) பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்ட இவ்விளக்கவுரை, கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் வரும் காட்சிப் படலம் (இராமபிரானின் தூதனாகிய அனுமான் சீதாதேவியை அசோகவனச் சிறையில் கண்ட நிகழ்ச்சியைக் கூறும் பகுதி), நிந்தனைப்படலம் (காமவேட்கையால் அறிவழிந்து அருவருக்கத் தக்க மொழிகளைக் கூறித் தன்னை இரக்கின்ற இராவணனைச் சீதாதேவியார் வஞ்சின மொழிகளால் வைதுரைக்கும் செயலைக்கூறும் பகுதி) ஆகிய இரு படலங்களில் உள்ளடங்கிய ‘மாடு நின்றவம் மணிமலர்’ எனத்தொடங்கும் செய்யுள் முதல், ‘அறிந்தா ரன்ன முச்சடை’ என்று தொடங்கும் செய்யுள் வரையுள்ள 159 செய்யுள்களுக்கானது.