செ.யோகராசா. மட்டக்களப்பு: மகுடம் பப்ளிக்கேஷன்ஸ், 90 பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி).
xiii, 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44939-0-2.
தமிழில் அண்மைக்காலமாக முச்சந்தி இலக்கியம் என்ற பெயரில் கவனத்துக்குள்ளாகிவரும் வாய்மொழிப்பாடல் வகையைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் அமைகின்றது. புது வகையான பாடல் மரபு, பாடு பொருள், வரலாற்று முக்கியத்துவம் ஆகிய மூன்று இயல்களில் இந்நூல் முச்சந்தி இலக்கியம் பற்றிப் பேசுகின்றது. பொதுவாக இயற்கை அநர்த்தங்கள், ஊர் நிகழ்வுகள், அன்றாட அனுபவங்கள், சமூகச் சார்பு, அரசியற் சார்பு, வசைபாடுதல், அறம்பாடுதல் போன்ற வடிவங்களில் இவை எம்மிடையே காலம்காலமாக வழங்கிவந்துள்ளமையை ஆசிரியர் ஆய்வுபூர்வமாக விளக்குகின்றார்