இராமசாமி சிறீஸ்கந்தராசா. கொழும்பு 6: இ.சிறீஸ்கந்தராசா, 93, பீட்டர்சன் ஒழுங்கை, ஈ 15, பீட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. ( கொழும்பு 6: ரெக்னோ பிரிண்டர்ஸ், 58, 2/1 காலி வீதி, வெள்ளவத்தை).
(2), 89 பக்கம், விலை: ரூபா 135., அளவு: 21.5×14.5 சமீ.
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் தலைமகனாகிய அம்பலவாணரின் பேரனான நூலாசிரியர் தமிழ் இலக்கியப் பரம்பரையில் வந்தவர். திருக்குறள் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு மிக்கவர். நூலாசிரியர், 1999-2001 கால கட்டத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்அறிவோர் ஒன்றுகூடல்களில் திருக்குறளை ஒவ்வொரு அதிகாரமாக ஆய்வுசெய்து உரையாற்றியிருந்தார். அவற்றின் எழுத்துப்பிரதி கனடா முரசொலியின் வார வெளியீட்டில் தொடர்ச்சியாகப் பதிவாகியிருந்தது. அவ்வுரைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 134781).